இந்தியா-அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 25, 2020, 02:22 PM IST
இந்தியா-அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது title=

புது டெல்லி: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தவிர, பயங்கரவாத பிரச்சினை குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் கடுமையாக பேசினார். பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவைக் குறித்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். இந்த இந்திய சுற்றுப்பயணத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று டிரம்ப் கூறினார்.

3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம்:
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து 24 எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவது அடங்கும். மற்றொரு ஒப்பந்தம் ஆறு AH 64E அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கும். இதற்கு 80 மில்லியன் டாலர் செலவாகும். 

கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்த தகவல்களை அளித்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார்.

இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை முக்கியமானது:
மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடி கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது, "எரிசக்தி மூலோபாய கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு மற்றும் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை போன்ற முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். பாதுகாப்புத் துறையில், இந்தியா-அமெரிக்க உறவை வலுப்படுத்துவது எங்கள் கூட்டாட்சியின் ஒரு முக்கிய அம்சமாகும்" என்றார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதம்:
பயங்கரவாதத்தைப் பற்றி குறிப்பிடுகையில், "குடிமக்களை தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க பிரதமர் மோடியும் நானும் கடமைப்பட்டுள்ளோம்" என்று டிரம்ப் கூறினார். பாகிஸ்தானின் மண்ணில் உள்ள பயங்கரவாதம் ஒழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

டிரம்ப் திங்களன்று அறிவித்தார்:
அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. 3 பில்லியன் டாலர் அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர் மற்றும் பிற உபகரணங்களுக்கான ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை எட்டப்படும் என்று அவர் கூறியிருந்தார். "இதுவரை விமானம், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல்கள் போன்ற சிறந்த உபகரணங்களை உருவாக்குகி வருகிறோம்" என்று டிரம்ப் கூறினார். நாங்கள் இப்போது இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்போகிறோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டிரம்பின் இரண்டாவது நாள்
டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அவரது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இரண்டு நாள் இந்திய பயணத்தில் உள்ளனர். இன்று இரண்டாவது நாள். இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பெரும் வரவேற்பு:
டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு பாரம்பரிய முறையில் ராஷ்டிரபதி பவனில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் முறையாக அமெரிக்கா வந்துள்ள டிரம்ப் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், டிரம்ப் தனது மனைவியுடன் ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்..

Trending News