ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்: 2024-க்கு முன் பெரிய தொகை கணக்கில் வரும், இதுதான் காரணம்

7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2023, 02:26 PM IST
  • சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 4 சதவிகிதம் அதிகரித்தது.
  • இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
  • டிஏ அரியர் தவிர ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்: 2024-க்கு முன் பெரிய தொகை கணக்கில் வரும், இதுதான் காரணம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் மற்றொரு நல்ல செய்தியைப் பெற உள்ளனர். இப்போது அரசு அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவுள்ளது. ஊழியர்கள் பெரிய வகையில் பயனடைய உள்ளனர். புதிய ஆண்டிற்குள், அதாவது 2024 ஆம் ஆண்டிற்குள் அரசாங்கம் சிக்கியுள்ள டிஏ அரியர் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டிஏ அரியர் தவிர ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் (Fitment Factor) அரசு அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் கூறி வருகின்றன. அப்படி நடந்தால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக இருக்கும். எனினும், இது குறித்து இன்னும் அரசு எதையும் அறிவிக்காததால், இந்த முடிவை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது. 

டிஏ அரியர் தொகை: இதன் விவரம் என்ன? 

கொரோனா பெருந்தோற்று நம் உலகை ஆட்கொண்ட நேரத்தில், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உலகமே ஸ்தம்பித்து போனதால், நிதி நெருக்கடியும் இருந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினருக்கு உதவ, அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) முடக்கியது. நிலைமை சற்று சரியானவுடன் டிஏ முடக்கம் நீக்கப்பட்டது. எனினும், மோடி அரசாங்கம் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை முடக்கப்பட்ட டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை. இந்த டிஏ அரியர் (Da Arrears) தொகையை அளிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என கூறப்படுகின்றது.  டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக ஊழியர் அமைப்புகள் அரசுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

மேலும் படிக்க | ஹஜ் உம்ரா விசாவில் மாற்றமா? 6 நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு NO Tourist VISA!

ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம்

மோடி அரசு விரைவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கப் போகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக உயரும் என்பது உறுதி. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.0 மடங்குக்கு அரசாங்கம் உயர்த்தலாம் என்று நம்பப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து  ரூ.26,000 ஆக உயரும்.

பொதுத் தேர்தல்கள்

அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) ஆதரவை பெற அரசு, டிஏ அரியர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் போன்ற அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தாண்டுக்கு முன்னதாக, இதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க| தீபாவளிக்கு தனியார் ரயில் சேவைக்கு அனுமதியா? தமிழ்நாட்டில் முன்பதிவு? உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News