ALERT!! ஜூலை 1 முதல் ATM விதியில் மாற்றம்; 8 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

வங்கி தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடக்கப்போகிறது. வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது விதிகளில் மாற்றம் ஏற்படலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2020, 06:45 AM IST
  • ஜூலை 1 முதல் நாடு முழுவதும் வங்கி தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள்
  • வங்கி ஏடிஎம்மில் மேற்கொள்ளப்படும் பரிவரத்தனைகளில் மாற்றம் ஏற்படலாம்.
  • ஒரு மாதத்தில் 8 இலவச பரிவர்த்தனைகளை செய்ய SBI வங்கி அனுமதிக்கிறது.
ALERT!! ஜூலை 1 முதல் ATM விதியில் மாற்றம்; 8 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் title=

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: வங்கி தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடக்கப்போகிறது. வங்கி ஏடிஎம்மில் (Bank ATM) இருந்து பணத்தை எடுப்பது மற்றும் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பதற்கான விதிகள் இதில் அடங்கும். நாட்டில் பரவி வரும் கொரோனா நெருக்கடியில், வங்கி ஏடிஎம்களில் (SBI customers) பணம் எடுக்க மத்திய அரசாங்கம் விலக்கு அளித்திருந்தது. இப்போது, அந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த மாற்றங்கள் அனைத்தையும் நீங்கள் ஜூன் 30-க்கு முன்னர் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதனால் உங்களுக்கு இழப்பு ஏற்படாது.

தகவல் கொடுத்த எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐயின் (SBI Twitter) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "மார்ச் 24 அன்று, எஸ்பிஐ ஏடிஎம்கள் (SBI ATM) மற்றும் பிற வங்கியின் ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை கட்டணங்களை ஜூன் 30 வரை விதிக்க தடை விதித்தார் நிதி அமைச்சர்.

ஏடிஎம்மில் இருந்து பணம் திரும்பப் பெறுதல்:

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க அனைத்து பரிவர்த்தனை கட்டணங்களையும் அரசாங்கம் திரும்பப் பெற்றது. கொரோனா நெருக்கடியின் நடுவில் வாழும் மக்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு குறைப்பதன் மூலம் மத்திய அரசாங்கம் பெரிய நிவாரணங்களை வழங்கியது. இந்த மூன்று மாதங்களும் 2020 ஜூன் 30 அன்று நிறைவடைகின்றன. இந்த விதிகளின் காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கவில்லை என்றால், பழைய விதிகள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

READ | வங்கி விவரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்; எச்சரிக்கும் SBI வங்கி

READ | வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை குறித்து SBI முக்கிய தகவல்

READ | SBI மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான செய்தி காத்திருக்கிறது...

இந்த நபர்கள் 8 பரிவர்த்தனைகளை இலவசமாகப் பெறுகிறார்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் உள்ள தகவல்களின்படி, மெட்ரோ நகரங்களில், எஸ்பிஐ தனது வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் 8 இலவச (8 free ATM Transactions) பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, அதன் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மூன்று மாத தள்ளுபடி:

ஊரடங்கு (Lockdown) மற்றும் கொரோனா காரணமாக, ஜூலை 1 முதல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க விதிகளில் கொடுக்கப்பட்ட மீதியை மக்கள் பெற மாட்டார்கள். ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க அனைத்து பரிவர்த்தனை கட்டணங்களையும் அரசாங்கம் திரும்பப் பெற்றது. கொரோனா நெருக்கடியின் நடுவில் உள்ள மக்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு குறைப்பதன் மூலம் அரசாங்கம் பெரிய நிவாரணங்களை வழங்கியது. இந்த தள்ளுபடி 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது 2020 ஜூன் 30 அன்று முடிவடையும்.

Trending News