அரசு ஊழியர்களை டார்கெட் செய்யும் மோடி அரசு.. அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய செய்தி!

Government Staff Da Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்பொழுது? மற்றும் ஓய்வு பெற்ற தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வு எப்பொழுது? வெளியான முக்கியத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2024, 03:58 PM IST
அரசு ஊழியர்களை டார்கெட் செய்யும் மோடி அரசு.. அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய செய்தி! title=

DA Hike Announcement 2024: அரசு ஊழியர்களுக்கான அகவலை படி உயர்வு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. முன்கூட்டிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை கொண்டு வர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு எனக் தகவல்.

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஜூலை 2024க்கான அகவலைப்படி குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என முன்னரே கூறப்பட்டது. 

செப்டம்பர் 25 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றே மத்திய அரசு டிஏ உயர்வுக்கான அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வழக்கமாக ஜனவரி மாத அகவலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜூலை மாத அகவலைப்படி உயர்வை அக்டோபர் மாதத்திலும் மத்திய அரசு அறிவிக்கப்படுகின்றன. எனினும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. 

செப்டம்பரில் அகவலைப்படி உயர்வு கிடைத்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 2020 சம்பளம் ஓய்வூதியத்தில் இந்த உயர்வு கிடைக்கும். இதனுடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.

மேலும் படிக்க - தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவலைப்படி எவ்வளவு உயரும்?

அகவலைப்படி 3% உயர்ந்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவலைப்படி நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும். இதுவே 4% உயர்ந்தால் டிஏ மற்றும் டிஆர் 54% ஆக உயரும். 

உதாரணமாக ஒரு ஊழியரின் மாத சம்பளம் ₹50,000 என்று இருந்தால், அகவலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு மாதா மாதம் சம்பளத்தில் ₹1500 கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு இந்த உயர்வு ₹18000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு
லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். 

மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

ஆகவே அகவலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வருவதால், மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வு எப்பொழுது?

இந்த நிலையில், தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 105 மாதங்களாக அகவலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. 

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து கழக சங்கங்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

எனவே தமிழக அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க - மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News