ரூ. 50,100,200,500... நோட்டுகள் முக்கிய அப்டேட்: ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் தகவல்

RBI on Currency Notes: உங்களிடம் சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2023, 03:01 PM IST
  • இந்தியாவில் நாம் பல மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகிறோம்.
  • ஆனால் சில நேரங்களில், நமக்கு கிடைக்கும் ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ, சேதமடைந்தோ இருக்கலாம்.
  • ஏடிஎம் இயந்தரத்திலிருந்து பெறப்படும் நோட்டுகளும் சில சமயம் அப்படி இருப்பதுண்டு.
ரூ. 50,100,200,500... நோட்டுகள் முக்கிய அப்டேட்: ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் தகவல்

இந்தியாவில் நாம் பல மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் சில நேரங்களில், நமக்கு கிடைக்கும் ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ, சேதமடைந்தோ இருக்கலாம். ஏடிஎம் இயந்தரத்திலிருந்து பெறப்படும் நோட்டுகளும் சில சமயம் அப்படி இருப்பதுண்டு. இப்படிப்பட்ட நோட்டுகள் செல்லுமா செல்லாதா என நமக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. இதை யாரும் வாங்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்வது?  இது தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக்கும் அழுக்கடைந்த, சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளுக்களை மாற்றுவதற்கான வசதியை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தகைய நோட்டுகளின் மதிப்பை தீர்மானிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பற்றி இங்கே காணலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதம் ஒரு விதியை உருவாக்கி, மே மாதம் அதை புதுப்பித்தது. அனைத்து வங்கிக் கிளைகளும் ருபாய் நோட்டுகள் தொடர்பான பிரச்சனைகளில் மக்களுக்கு உதவ வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. பழைய சேதமடைந்த நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகள் மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை அளிக்க வேண்டும். இதற்காக மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை அளித்தது. 

ரிசர்வ் வங்கியிடம் (Reserva Bank of India) இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது. ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின் கீழ், சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

வங்கிகள் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது நோட்டின் நிலையைப் பொறுத்தது. சிதைந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மாற்றிக்கொள்வது முற்றிலும் நோட்டின் நிலையைப் பொறுத்தது.

எவை சிதைந்த நோட்டுகளாக கருதப்படும்? 

கரன்சி நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது ரூபாய் நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேலான துண்டுகளாக கிழிந்து இருந்தாலோ அது சிதைந்த நோட்டாக கருதப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Business Idea: எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் லட்சங்களை அள்ளலாம்..!

ரூபாய் நோட்டை மாற்ற வங்கிக் கணக்கு அவசியமா?

அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்றும் வசதிக்காக ஒருவர் கணக்கு தொடங்க தேவையில்லை. அவர் தனது அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சேவையை அனைத்து வேலை நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கிழிந்த / சேதமடைந்த நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

அழுக்கான மற்றும் சிதைந்த நோட்டுகளின் மதிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் சொந்த விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் பெறும் வங்கி நோட்டின் மதிப்பு நோட்டின் தரத்தைப் பொறுத்தது. வாடிக்கையாளர்கள் நோட்டின் மதிப்பை முழுமையாகவோ, பாதியாகவோ பெறலாம். நோட்டு குறைவாக சிதைந்திருந்தால், சரியான விலையைப் பெறலாம். அதே நேரத்தில், அது அதிக அளவில் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் பாதி விலையைப் பெறுவீர்கள். அல்லது எதுவுமே கிடைக்காமலும் போகலாம்.

மேலும் படிக்க | MSSC Vs SSY: பெண்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News