நாடு முழுவதும் SBI வங்கியின் 600 புதிய கிளைகளை திறக்க திட்டம்

நாடு முழுவதும் நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ 600 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2019, 07:57 PM IST
நாடு முழுவதும் SBI வங்கியின் 600 புதிய கிளைகளை திறக்க திட்டம் title=

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (State Bank of India) பழைய கிளைகளை புதுப்பிக்கும் பணி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) நாடு முழுவதும் 600 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை அளித்த எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், வங்கிகளுடனான இணைப்பிற்குப் பிறகு, இணைக்கப்பட்ட கிளைகளின் பராமரிப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அது படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை செப்டம்பர் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார். வரவிருக்கும் ஐந்து மாதங்களில் கடன் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனவும் கூறினார்.

கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட பின்னர் வணிகத் துறையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அவர் கூறினார். Bed Loan கொடுப்பது கணிசமாகக் குறைந்துவிட்டன, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (PSB) கணிசமாகக் குறைந்துவிட்டன. எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance) மசோதா காரணமாக அழுத்தத்தில் இருக்கும் நிதித்துறை நிறுவனங்கள், இந்த பிரச்சினைகளை தீர்க்க சட்ட கட்டமைப்பைப் பெறும்.

அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக எஸ்பிஐ தலைவர் தெரிவித்தார். எஸ்பிஐ கேபிடல் (SBI Capital Markets) அதில் ஒரு பங்குதாரராக இருக்க விரும்புகிறது. பங்குதாரர் ஆகுவதற்கு ஒப்பந்தம் கிடைத்தால் எஸ்பிஐ கேபிடல் அதில் நிதியை செயல்படுத்தும்.

பெரும்பாலான வங்கிகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு உள்ளன. அதை சரியாக செயல்படுத்த ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். இப்போது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாது. எஸ்பிஐ லைஃப் (SBI Life Insurance Company) தனது 4.5 சதவீத பங்குகளை விற்றுள்ளது என்று அவர் கூறினார்.

Trending News