உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்; இல்லையேல் நிதி இல்லை - மத்திய அரசு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்; இல்லையேல் நிதி இல்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

Last Updated : Jul 16, 2019, 12:44 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்; இல்லையேல் நிதி இல்லை - மத்திய அரசு! title=

உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்; இல்லையேல் நிதி இல்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்துள்ளது என மக்களவை பேசிய திமுக எம்.பி ஆ.ராசா புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் அளித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனில் உள்ளாட்சி அமைப்புக்கான நிதியை விடுவிக்க முடியாது என தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக உள்ளாட்சி நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை அன்று, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் 3 மாதம் அவகாசம் கேட்டது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில், அவகாசம் கேட்டு பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளும், தேர்தல் ஏற்பாடுகளும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது,. இதனையடுத்து வரும் ஜூலை 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, தண்ணீர் பிரச்சனை காரணமாகவே தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் பணிகளில் தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் 60 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை முன்வைத்துள்ளது. 

அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News