எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -H ராஜா!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்  H ராஜா!

Last Updated : May 24, 2019, 03:19 PM IST
எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -H ராஜா! title=

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்  H ராஜா!

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

வெளியான தேர்தல் முடிவுகளின் படி மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

இந்நிலையில் பாஜக-விற்கு வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்த நாட்டு மக்களுக்கு நன்றி என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின்  ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக படு தோல்வி கண்டது. தமிழகத்தில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட H ராஜா 233295 பெற்றார், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 564002 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News