மகாராஷ்டிராவில், 50-50 சூத்திரத்தில் ஆட்சி அமைக்கும் தலைமை...

50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.

Last Updated : Oct 26, 2019, 12:30 PM IST
மகாராஷ்டிராவில், 50-50 சூத்திரத்தில் ஆட்சி அமைக்கும் தலைமை... title=

50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.

உத்தவ் தாக்கரே தனது மும்பை இல்லத்தில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர்களை சந்திப்பார், அதன் பின்னர் பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் நியமிப்பார் என கூறப்படுகிறது. மேலும் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக சிவசேனா கூட்டம் நடத்த இருப்பதாகவும், பெரும்பாலும் இந்த பதவி ஆதித்யா தாக்கரேவிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அரசாங்கத்தை அமைப்பதில் சிவசேனாவின் 50-50 நிபந்தனை குறித்த உத்திகளைக் கையாள பாஜகவும் சனிக்கிழமை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

சிவசேனாவின் உதவியின்றி மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்க முடியாது. ஏனெனில், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் மொத்தம் 105 பாஜக MLA-க்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர், சிவசேனா 56 இடங்களை வென்றுள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக-விற்கு போதுமான எண்ணிக்கை தங்கள் கைவசம் இல்லை. 

என்றபோதிலும், பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க முடியும். 

எனினும் பாஜக-விற்கு சிவசேனா தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுமாயின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வென்ற ஆதித்யா தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது சிவசேனா.

உத்தவின் நிலை கருத்தில் கொள்ளப்பட்டால், முதல்வரின் நாற்காலி இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்குச் செல்லும், மீதமுள்ள காலம் பாஜக முதல்வர் தலைமையில் இருக்கும். இதனிடையே சிவசேனா, அமைச்சரவையிலும் 50% பங்குகளை கோருகிறது. மேலும், முதல் காலத்திற்கு சிவசேனா முதல்வர் நாற்காலி கிடைக்கவில்லை என்றால், உத்தவ் தாக்கரே, உள்துறை, நிதி, வருவாய், நகர அபிவிருத்தி, வன மற்றும் கல்வி அமைச்சுகளை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஆதித்யா மகாராஷ்டிராவின் இளைய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதுகுறித்து சிவசேனா MLA பிரகாஷ் சர்வே தெரிவிக்கையில்., "ஆதித்யாவை எங்கள் முதல்வராக நாங்கள் விரும்புகிறோம். இது எங்கள் முதல் மற்றும் முக்கிய கோரிக்கை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவும் எங்கள் கட்சியும் 50-50 அதிகாரப் பகிர்வு சூத்திரத்தில் ஒப்புக் கொண்டன, அவை நடைமுறையில் தற்போது செயல்படுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். எனினும் மாகாராஷ்டிர முதல்வர் நார்காலி குறித்து இறுதி திட்டம் இரு கட்சி கூட்டத்திற்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News