Video: இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய 4 இளைஞர்கள் கைது!

பிஹார் மாநிலம் பாகாஹா-வில் இளம்பெண்ணை தூணில் கட்டிவைத்து அடித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Last Updated : May 6, 2018, 11:02 AM IST
Video: இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய 4 இளைஞர்கள் கைது! title=

பாட்னா: பிஹார் மாநிலம் பாகாஹா-வில் இளம்பெண்ணை தூணில் கட்டிவைத்து அடித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

பிஹாரின் பாகாஹா என்னும் சராங்கத்திற்கு உட்பட்ட கத்தையா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வீட்டின் தூணில் கட்டிவைத்து இளைஞர்கள் சரமாரியாக அடித்த காட்சி கடந்த வியாழன் முதல் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சுர்ஷன் குமார்(25), ஹன்ரார்ராஜ் குமார்(27), கன்வால் குமார்(22) மற்றும் மாக்நத் பர்காரியா(23) என்னும் 4 பேரினை நௌராங்கியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரி சாதர் தெரிவிக்கையில்... கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது தோழிக்கு பிரச்சணை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சணை தீர்த்துக்கொள்வது தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் காவல்துறையினை அனுகியுள்ளனர். ஆனால் காவல்துறை தங்களுக்குள்ளாக இந்த பிரச்சணையினை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிரச்சணையின் ஆரம்ப புள்ளியாக பாதிக்கப்பட்ட பெண் தன் தோழியின் நிர்வாண புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரமே இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. 

Trending News