30 வயது ஆகிவிட்டதா? இதயத்திற்கு இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!

இதயம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், இது இரத்தத்தை பம்ப் செய்வதற்கும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும் உதவுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Mar 14, 2023, 03:27 PM IST
  • வயதாகும்போது வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு ஏற்படுகிறது.
  • வயதாவதால் சிலருக்கு ஆர்த்ரோஸ்க்ளிரோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
  • வயதானவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.
30 வயது ஆகிவிட்டதா? இதயத்திற்கு இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை! title=

வயது முதிர்வு என்பது இயற்கையான ஒன்று தான், மனிதராக பிறந்த அனைவருமே முதுமை எனும் நிலையை அடைந்து தான் ஆக வேண்டும்.  முதுமை நிலையை அடையாமல் யாராலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது.  வயதாகும்போது, ​​​​உங்கள் உடலானது ஹார்மோன்களின் அடிப்படையில் மட்டுமல்ல, உறுப்புகளின் செயல்பாடுகளிலும் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.  உதாரணமாக, இதயம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், இது இரத்தத்தை பம்ப் செய்வதற்கும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும் உதவுகிறது.  அதுவே வயதான பிறகு உங்கள் இதயத்தின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படலாம், சில இதய நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.  

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் மாதுளை: இன்னும் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்

வயதாகும்போது வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு ஏற்படுகிறது, வளர்சிதை மாற்றம் என்பது உடலில் நிகழும் ஒரு வேதியியல் செயல்முறையாகும், இது உணவை ஆற்றலாக மாற்றுகிறது, இது எடை இழப்பு செயல்முறைக்கு உதவுகிறது.  இருப்பினும், ஒரு நபர் இளமையாக இருக்கும்போது வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருக்கும், அதுவே அந்த நபர் 50 அல்லது அதற்கு மேல் அடையும் போது, ​​அவர்களின் வளர்சிதை மாற்றம் குறைகிறது.  வயதானவர்களுக்கு ஆரோக்கியமான எடையை பராமரிப்பது கடினமாகிறது.  இதனால் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.  இதயம் வயதாகும்போது, ​​உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.  இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் தமனி சுவர்களின் மென்மையான உள் புறணியை சேதப்படுத்துகிறது, இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.  

வயதாவதால் சிலருக்கு ஆர்த்ரோஸ்க்ளிரோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது, இது தமனி சுவர்களில் கொழுப்புகளை படிய வைக்கிறது.  இதனால் பிளேக் உருவாகிறது,  சில நேரங்களில் பிளேக் வெடித்து இரத்த உறைவுக்கு வழிவகுக்கும்.  வயதானவர்களுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் காரணமாக வயதானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.  வயதானவர்களுக்கு ஆஞ்சினா பெக்டோரிஸ் அல்லது இடது மார்பில் வலி ஏற்படுகிறது.  இதனால் மார்பு பகுதியில் கடுமையான வலி, அழுத்தம் அல்லது இறுக்கம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | பல நோய்களுக்கான மருந்து இந்த பச்சை இலை: எப்படி சாப்பிடுவது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News