நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் மாதுளை: இன்னும் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்

Pomegranate for Diabetes: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது கடினம். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2023, 05:02 PM IST
  • உடலில் இரத்தம் இல்லாதவர்கள் அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனத்தை எதிர்கொள்கின்றனர்.
  • அத்தகைய நிலை இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.
  • உங்களுக்கும் இந்த நோய் இருந்தால், கண்டிப்பாக மாதுளையை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் மாதுளை: இன்னும் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள் title=

சர்க்கரை நோய்க்கு மாதுளம் பழம்: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயில், உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது. சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், இந்த நோய் பலருக்கு ஆபத்தானதாகக்கூடும். தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது கடினம். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், பின்னர் சிறுநீரகம் மற்றும் இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். இயற்கையான வழிகளிலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு பழத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நோய்களை எதிர்த்து போராடும் மாதுளை 

மாதுளம்பழம் பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான ஆயுஷி யாதவ், ஜீ நியூஸிடம் பேசுகையில், மாதுளை நீரிழிவு நோய்க்கு மட்டுமல்லாது இன்னும் பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருவதாக கூறினார்.

மாதுளையில் காணப்படும் சத்துக்கள்

மாதுளையில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இதில் உள்ளன. அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

மேலும் படிக்க | பல நோய்களுக்கான மருந்து இந்த பச்சை இலை: எப்படி சாப்பிடுவது?

மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. நீரிழிவு நோயில் பயனுள்ளதாக இருக்கும்

மாதுளை விதைகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தை போல செயல்படுகின்றது. நார்ச்சத்து அதிகம் கிடைக்க இதை நேரடியாக சாப்பிடுவது நல்லது. ஆனால் சாறு எடுத்து குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க அது பெரிதும் உதவும்.

2. இரத்த சோகையில் நன்மை பயக்கும்

உடலில் இரத்தம் இல்லாதவர்கள் அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். அத்தகைய நிலை இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கும் இந்த நோய் வந்தால், கண்டிப்பாக மாதுளையை எடுத்துக் கொள்ளுங்கள். இது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது மட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

3. கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்

மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டு பண்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பழத்தில் உள்ள ஃபோலேட், பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 1 நாளில் 1 கிலோ எடை குறையணுமா? இதோ சுலபமான வழி, இதை குடிங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News