வீடியோ: பாகிஸ்தான் BAT குழு முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் குழு "பேட்" முயற்ச்சியை முறியடித்த இந்திய ராணுவம். எப்படி முறியடிக்கப்பட்டது காணொளி வெளியிடு.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2019, 10:34 AM IST
வீடியோ: பாகிஸ்தான் BAT குழு முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் title=

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிக்கிறது. காஷ்மீரில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த பாகிஸ்தானின் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் குழு 'பேட்' (BAT Border Action Team) எப்படி இந்திய எல்லைக்குள் ஊடுருவலை மேற்கொள்கிறார்கள் என்பதும், நமது இராணுவ வீரர்கள் எவ்வாறு அவர்களின் முயற்ச்சியை முறியடித்தனர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.

அதாவது, பாகிஸ்தானின் ஊடுருவல்கள் செப்டம்பர் 12-13 இரவு ஹாஜிபூர் துறையில் எல்லைக்கோடு (LOC) அருகே மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது வீடியோ மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 15 ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தன.

 

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைய முயற்சிப்பதை இராணுவ வட்டாரங்கள் வெளியிட்ட வீடியோவில் தெளிவாகக் காணலாம். நைவ் விஷன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் ஊடுருவும் நபர்கள் காணப்படுகிறார்கள். எல்லையில் ஊடுருவ முயற்ச்சி செய்த பயங்கரவாதிகளின் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவின் இந்த கமாண்டோக்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் பீப்பாய் கைக்குண்டு ஏவுகணைகள் இருந்தன.

ஹாஜிபூர் துறையில் செப்டம்பர் 10-11 அன்று பாகிஸ்தான் செய்த யுத்த நிறுத்த மீறலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 2 வீரர்களையும் இந்தியா கொன்றது. இந்திய இராணுவத்திற்கு வெள்ளைக் கொடியைக் காட்டி தனது வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்றனர். முன்னதாக் இறந்த பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை அவர்களால் எடுக்க முடியவில்லை. இந்தியா தொடர்ந்து கடுமையான பதிலடி கொடுத்தால், பின்னர் அவர்கள் வெள்ளைக்கொடி காட்டி விட்டு தங்கள் நாட்டு வீரர்களின் உடல்களை எடுத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News