Air India நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது; அதன் அலுவலகங்களை மூடியது

இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. விமான சேவையுடன் இந்த நாடுகளில் ஏர் இந்தியா தனது அலுவலகங்களை மூடியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2020, 09:15 PM IST
Air India நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது; அதன் அலுவலகங்களை மூடியது title=

புது டெல்லி: ஏற்கனவே கொரோனா தொற்று (COVID-19) காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சேவையை விமானம் வழங்கி வருகிறது. இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. விமான சேவையுடன் இந்த நாடுகளில் ஏர் இந்தியா தனது அலுவலகங்களை மூடியுள்ளது. கொரோனாவால் பரவும் நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

தகவல்களின்படி, கோபன்ஹேகன் (Copenhagen), ஸ்டாக்ஹோம் (Stockholm), மிலன் (Milan), மாட்ரிட் (Madrid) மற்றும் வியன்னாவில் (Vienna)  ஏர் இந்தியா நிலையங்களை மூடியுள்ளது.

ALSO READ |  Air India Plane crash: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?

ஏர் இந்தியாவைப் பொறுத்தவரை, கோவிட் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த நாடுகளுக்கு விமான சேவை இல்லை, அதேபோல "வந்தே பாரத் மிஷன்" (Vande Bharat Mission) கீழ் எந்த விமானமும் இயங்காது.

இந்த 5 நாடுகளிலிருந்தும் ஏர் இந்தியா தனது ஊழியர்களை திரும்ப அழைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கொரோனா (Coronavirus) காலத்திற்கு முன்பு, ஏர் இந்தியா விமானங்கள் இந்த ஐந்து நாடுகளுக்கும் சேவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது நிலைமை சரியாக இல்லை. கொரோனா நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நாடுகளுக்கான தனது சேவையையும் அலுவலகங்களையும் மூட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

ALSO READ | 5 ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்பும் Air India

சிலர் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் கூறுகிறார்கள். இந்த நாட்களில் ஏர் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் பயணிகளின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, விமான நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஏர் இந்தியா தற்போது சுமார் 70 ஆயிரம் கோடி கடன்களைக் கொண்டுள்ளது.

Trending News