இன்று வங்கிகள் இரவு 8-மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

Last Updated : Mar 31, 2018, 06:38 AM IST
இன்று வங்கிகள் இரவு 8-மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி! title=

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!

மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வௌ்ளி ஆகிய தொடர் விடுமுறைகளால் கடந்த இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதனால், பலருக்கும் பண பரிவர்த்தனை மேற்கொள்வது முடியாத காரியமாக இருக்கிறது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி சேவைகள் நடைபெறவில்லை என்றால், பலவிதமான பொருளாதார பாதிப்பு ஏற்படும் நிலை. இதைக் கருத்தில் கொண்டு, சனிகிழமை (இன்று) வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக மாலையுடன் வங்கி பணிகள் முடிந்துவிடும். ஆனால், ஆன்லைன் பண பரிமாற்றம் முதல் அனைத்துவிதமான வங்கி சேவைகளும் இரவு 8 மணி வரை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்று (சனிக்கிழமை) இரவு எட்டு மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், கடந்த 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31-ம் தேதி இன்றே கடைசி தினம். இதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை வருமான வரித்துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News