மருமகளை காதலித்த மாமனார்... மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை!

Rajasthan Bizarre Love: மருமகளை காதலித்து, மகனின் பைக்கிலேயே இருவரும் வீட்டை விட்டு தப்பி ஓடிச்சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2023, 01:43 PM IST
  • அந்த பெண்ணுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
  • அந்த குழந்தையை விட்டுவிட்டு இரண்டு பேரும் ஓடிவிட்டனர்.
  • அவரின் மகன் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மருமகளை காதலித்த மாமனார்... மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை! title=

Rajasthan Bizarre Love: காதலில் விழுவது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் நபரிடம், நீங்கள் காதலில் விழுந்தால் என்ன செய்வது? வினோதமானது தானே! ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது மகனின் மனைவியுடன் காதலித்துள்ளார். இந்த காதலால், அந்த நபரின் பேத்தியை (மகனின் மகள்) விட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிலோர் கிராமத்தில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பவன் வைரகி சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த புகாரில், தனது தந்தை ரமேஷ் வைரகி, தன் மனைவியுடன் ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை தனது மனைவியை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் நிரபராதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | CCTV: சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு... ஆளையே சாய்த்த அதிவேக தண்ணீர் - மிரளவைக்கும் வீடியோ!

அந்த பெண்ணுடன் பவனுக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. கூடுதலாக, பவன் தனது தந்தை சில சட்டவிரோத வேலைகளில் இருப்பதாக கூறினார். தான் வேலை காரணமாக கிராமத்தை விட்டு ஒதுங்கி இருப்பதாக கூறினார். மகனின் மனைவியைத் திருடியது மட்டுமின்றி, அவரின் இருசக்கர வாகனத்தையும் அவரது தந்தை திருடிச்சென்றுள்ளார். 

இதற்கிடையில், போலீசார் தனது வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பவன் குற்றம் சாட்டினார். பவனின் குற்றச்சாட்டு குறித்து சதார் நிலைய அதிகாரி அரவிந்த் பரத்வாஜ் கூறுகையில், இந்த வழக்கை விடாமுயற்சியுடன் கவனித்து விசாரித்து வருவதாகக் கூறினார். திருடப்பட்ட இரு சக்கர வாகனத்துடன் தப்பி ஓடிய தம்பதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தம்பதியின் இருப்பிடம் குறித்த எந்த விவரங்களையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சம்பவம் ஜீரணிக்க கடினமாக இருந்தாலும், இதுபோன்ற வழக்குகள் நடைபெறுகின்றன. ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில், 40 வயது மாமியார் தனது மருமகனை காதலித்தார். மாமனாரை போதையில் தள்ளிவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் செய்தி: இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியத் திட்டம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News