Karnataka Election 2023: தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை?

Karnataka Election 2023:  கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தபோது ஏன்  அண்ணாமலை அமைதி காத்தார்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2023, 09:25 PM IST
  • கர்நாடகத் தேர்தலில் தமிழர்கள் இடையே பாஜக வாக்கு சேகரிப்பு
  • தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தப்பட்டு கன்னட கீதம் இசைக்கப்பட்டது
  • தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தமிழர்கள் முன்னிலையில் அவமானம்
Karnataka Election 2023: தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை? title=

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது என்றால், தமிழ்நாட்டு தலைவர்கள் அங்கு இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம் நேர்ந்ததைக் கண்டு தமிழர்கள் கொந்தளிக்கின்றனர்.

கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தபோது ஏன் அண்ணாமலை அமைதி காத்தார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ் சங்கமாக திகழ்ந்து வருகிறது. இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் இன்று பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | Karnataka Election 2023: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும்! அமித் ஷா சொல்வதை மறுக்கும் கால பைரவர்

இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிக்கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்தினார்கள். அதுதான் வழக்கமான நடைமுறை ஆகும். அப்போது, மேடையில் இருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்‌.

அந்த சூழ்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, உடனடியாக குறுக்கிட்டார். ஒலிபெருக்கியில் இசைத்துக் கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார். பின்பு பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட நாட்டு கீதத்தை பாடும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட நாட்டின் கீதத்தை பாட வைத்தனர். தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள் இவ்வாறு நடந்துக் கொண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | Rahul Gandhi: பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் கிடைக்கும்! ராகுலின் கர்நாடக தேர்தல் கணிப்பு

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரங்களில், பாஜக அத்துமீறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் அமித் ஷா மீது காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத துவேஷம் மற்றும் ஜாதிய ரீதியிலான வெறுப்புணர்வை பரப்பி, கர்நாடக மாநிலத்தின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமித் ஷா மீதான காங்கிரஸ் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அவர் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக, 153, 153A, 171G, 505, 120B, 123 ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ந்த அவமானம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News