போலி மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற 3 நபர்கள் கைது!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்றதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Last Updated : Jul 13, 2018, 10:42 PM IST
போலி மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற 3 நபர்கள் கைது! title=

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்றதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

பேலி முத்திரைகள் பதித்து மதுபாட்டில்களை ராணுவ கேண்டின்களுக்கு வினியேகம் செய்து வந்த இக்கும்பள் குறித்து டெல்லி ஓக்லா காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நவீன் குமார்(24) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இத்தகவல் தொடர்பாக ஓக்லா 3-வது பேஷ் பகுதியில் வெண்மை நிற சில்வர் வேகான் பரிசோதிக்கப்பட்டது. இந்த காரில் 211 இந்திய தயாரிப்பு வெளிநாட்டு பானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களில் 166 ஆப்பிஸர்ஸ் சாயிஸ் விஸ்கி, 22 ஓல்ட் மங்க் பாட்டில்கள், 23 மெக்டொவல்ஸ் பாட்டில்கள் அடங்கும்.

விசாரணையில் நவீன் குமாரை அவரது நண்பர்கள் இருவர், விரைவில் பணம் சம்பாதிக்க இந்த தொழிலை செய்ய கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். இவர் கொடுத்த தகவலின் பெயரில் இவரது கூட்டாளிகள் ராஜேஷ் மற்றும் பாபு என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News