நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!! விவரம் உள்ளே!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

Last Updated : Mar 9, 2018, 09:04 AM IST
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!! விவரம் உள்ளே! title=

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க இன்று (மார்ச் 9-ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட பட்டுள்ளதாக மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

அதன் படி மார்ச் 12-ம் தேதி வரை மாலை 5.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு 13-ம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆதாருக்கு பதிலாக மாணவ, மாணவிகள்  ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் எதை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கிறபோது பயன்படுத்துகிறார்களோ, அந்த அடையாள ஆவணத்தை தேர்வு எழுதும் வரும் மாணவ, மாணவிகள் காட்ட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ  தெரிவித்து உள்ளது.

Trending News