No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்

நவம்பர் 29ஆம் தேதியன்று கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, 2021 தாக்கல் செய்யப்படும்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2021, 07:15 AM IST
  • விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கும்
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்கும்
  • விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார் title=

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன்படி, விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம், பண்ணை சேவைகள் சட்டம், 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (அத்தியாவசியப் பொருட்கள்) ஆகியவற்றை ரத்து செய்ய, விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, 2021, (farm laws repeal bill) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.

அதற்காக, நவம்பர் 29ம் தேதி தொடங்கும் நடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவை (farm laws repeal bill) மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.  

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதிக்கும் அதே வேளையில், நாட்டில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய முற்படும் புதிய மசோதாவும், வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். அதற்கான பட்டியலில் இந்த மசோதாவையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு

நாடாளுமன்ற குளிர்கால அமர்வில் தாக்கல் செய்யப்படவுள்ள 26 மசோதாக்களை (Bills in Parliament) மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு, இன்று (நவம்பர் 24, 2021: புதன்கிழமை) மத்திய அமைச்சரவையால் விவாதிக்கப்பட உள்ளது.

இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் கொடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நவம்பர் 19 அன்று மூன்று மத்திய விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) புதிய கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.

2020ல் மத்திய அரசு சட்டங்களை இயற்றியதில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அரசாங்கத்தின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தாலும், அந்த நடைமுறை நிறைவடைந்த பிறகுதான், போராட்டம் முடிவுக்கு வரும் என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Also Read | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News