பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்; J&K, பஞ்சாப்பில் ஆரஞ்சு எச்சரிக்கை!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை!!

Last Updated : Oct 17, 2019, 07:31 AM IST
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்; J&K, பஞ்சாப்பில் ஆரஞ்சு எச்சரிக்கை!  title=

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை!!

பிராந்தியத்தில் சில பாதுகாப்பு தளங்களை குறிவைக்க பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டுள்ளதாக புதிய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, ஜம்மு மற்றும் பஞ்சாப் பகுதியில் உள்ள பாதுகாப்பு தளங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. "பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தளங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இந்திய விமானப்படை பஞ்சாபில் பதான்கோட் மற்றும் ஜம்மு உள்ளிட்ட விமான தளங்களை ஆரஞ்சு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதாக" என்று அரசாங்க வட்டாரங்கள் ANI-யிடம் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை காலை படைகளுக்கு தகவல் கிடைத்ததாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு தளங்கள் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். "இந்த தகவலை இன்று காலை படைகள் பெற்றன, அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பு தளங்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. அப்போதே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 முதல் 10 பயங்கரவாதிகள் ஊடுருவி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பஞ்சாப், ஜம்முவில் உள்ள பாதுகாப்பு படை முகாம்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்முவில் உள்ள விமானப்படை முகாம்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையை விமானப்படை விடுத்துள்ளது. 

 

Trending News