கோரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை!

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து நிர்வாகம் கவலை கொண்டுள்ளது எனவும், மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 4, 2020, 03:51 PM IST
கோரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை! title=

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து நிர்வாகம் கவலை கொண்டுள்ளது எனவும், மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ள நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்., சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு பணிக்குழு எனது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிலைமையை அவசர அவசரமாக சமாளிக்க பணிக்குழு உறுப்பினர்களைக் கேட்டுள்ளேன் என தெரிவித்தார்.

தேவைப்படும் பட்சத்தில், டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனையிலும், LNJP மருத்துவமனையிலும் ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்த டெல்லி மனிதருடன் தொடர்பு கொண்ட 88 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட கேஜ்ரிவால், அவர்கள் அனைவரும் தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியா தற்போது மற்ற நாடுகளில் இருந்து இந்தியா பயணிக்கும் அனைத்து பயணிகளையும் திரையிடும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிவித்த சில நேரங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் 28-ஆக அதிகரித்துள்ளது. இதில் இதுவரை ஆறு நேர்மறையான கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. COVID-19-ன் சமீபத்திய வழக்குகள் புது டெல்லி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் இருந்து பதிவாகியுள்ளன, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய நாட்டவர் நோய்த்தொற்றுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிப்பபடும் நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், ஜெய்ப்பூரில் உள்ள இத்தாலிய நாட்டினருடன் தொடர்பு கொண்ட 21 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் மூன்று இந்தியர்கள் (பஸ் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உட்பட) 24 பேர் சோதனைக்காக ITBP வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது, பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Trending News