COVID & டெங்குவால் பாதிக்கபட்ட துணை முதல்வருக்கு தீவிர சிகிச்சை!!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது..!

Last Updated : Sep 25, 2020, 07:53 AM IST
COVID & டெங்குவால் பாதிக்கபட்ட துணை முதல்வருக்கு தீவிர சிகிச்சை!! title=

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது..!

டெல்லியின் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் (Manish Sisodia) உடல்நலம் கவலைக்கிடமானதை தொடர்ந்து, அவர் தலைநகரில் உள்ள LNJP மருத்துவமனையிலிருந்து சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்த தகவலை துணை முதல்வர் அலுவலகம் வழங்கியது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது உறுதியானது. வீட்டு தனிமைப்படுத்தலின் போது அவரது உடல் நலம் மோசமடைந்ததால் அடைந்ததால் கடந்த புதனன்று டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனா பாதித்த அவருக்கு டெங்குவும் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் வியாழன்று ICU-விலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ALSO READ | வெறும் 4,000 ரூபாய்க்கு அட்டகாசமான Jio ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

இது குறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், லோக் நாயக் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனக்கு சிறப்பான மருத்துவப் பணி செய்தனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். நோயாளிகளை இவர்கள் அணுகும் முறை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சத்யந்தர் ஜெயின் ஜூன் மாதத்தில் COVID-19-க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டார், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. வியாழக்கிழமை 3,834 புதிய கோவிட் -19 பாதிப்புகள், தேசிய தலைநகரில் எண்ணிக்கை 2.60 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,123 ஆக உயர்ந்தது. முந்தைய நாள் 59,183-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. 

டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புல்லட்டின் படி, முப்பத்தாறு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 5,123 ஆக உள்ளது. வியாழக்கிழமை செயலில் உள்ள வழக்குகள் முந்தைய நாள் 30,836 இலிருந்து 31,125 ஆக உயர்ந்தன.

Trending News