முடிவுக்கு வந்த மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி : முதலமைச்சராகப் பதவியேற்கும் தேவேந்திர பட்னாவிஸ்

Maharashtra Politics : மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்பார் எனவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 30, 2022, 04:03 PM IST
  • முடிவுக்கு வந்த மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி
  • நாளை ஆட்சியமைக்க உரிமை கோரும் தேவேந்திர பட்னாவிஸ்?
  • துணை முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே
முடிவுக்கு வந்த மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி : முதலமைச்சராகப் பதவியேற்கும் தேவேந்திர பட்னாவிஸ் title=

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் நெருக்கடி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை நள்ளிரவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உத்தவ் தாக்கரே வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜக நாளை ஆட்சி அமைக்க உரிமை கோரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜக தலைமையிலான புதிய பாஜக அரசில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்பது குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

பாஜகவில் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், ஆசிஷ் ஷேலர், பிரவீன் தரேகர், கணேஷ் நாயக், ரவீந்திர சாவன், சுரேஷ் காடே, ஜெயக்குமார் ராவல், அதுல் சாவே, மதுரி மிசால் உள்பட 21 அமைச்சர்களும், 8 இணை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். 

ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உதய் சமந்த், அப்துல் சத்தார், தனாஜி சாவந்த், சஞ்சய் ரத்தோட், குலாப்ரோ பாட்டீல், சம்புராஜ் தேசாய் உட்பட 9 அமைச்சர்களும், 4 இணை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவை அவமானப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல எனவும், தாக்கரே குடும்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல எனவும் ஏக்நாத் ஷிண்டே தரப்பின் செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார். 

தாங்கள் யாரையும் முதுகில் குத்தவில்லை எனவும், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் தாங்கள் இப்போதும் உத்தவ் தாக்கரேவுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் எக்நாத் ஷிண்டே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News