டி.கே.சிவக்குமாரின் காவலை மேலும் 5 நாள் நீடித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம்

வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை டி.கே. சிவகுமார் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2019, 06:15 PM IST
டி.கே.சிவக்குமாரின் காவலை மேலும் 5 நாள் நீடித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் title=

புதுடெல்லி: டி.கே. சிவகுமாரின் கோரிக்கைய நிராகரித்தா டெல்லி சிறப்பு நீதிமன்றம், அவரை வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனக் கூறியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். சிவகுமாரிடம் அமலாக்கத்துறை நான்கு நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி கைது செய்தனர். அடுத்த நாள் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது.

இதன்பின்னர் கடந்த 10 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து, இன்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமா ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல் செய்தது. அதேபோல டி.கே.சிவகுமார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், டி.கே. சிவகுமாரின் கோரிக்கைய நிராகரித்தார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதி, வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனக் கூறினார்.

Trending News