காஷி விஸ்வநாத் கோவிலிக்குள் நுழைய பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காஷி விஸ்வநாத் கோவிலிக்குள் நுழையும் பக்தர்களுக்கு ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்படும்.

Last Updated : Jan 13, 2020, 10:30 AM IST
காஷி விஸ்வநாத் கோவிலிக்குள் நுழைய பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு! title=

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காஷி விஸ்வநாத் கோவிலிக்குள் நுழையும் பக்தர்களுக்கு ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்படும்.

காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.

தற்போது இந்த கோவிலில் பக்தர்களுக்கு ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்படும். புதிய விதிப்படி, ஆண்கள் இந்து பாரம்பரிய உடையான 'தோதி-குர்தா' மற்றும் பெண்கள் சேலை அணிய வேண்டும்.

மேலும் இந்த கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் காலை 11 மணி வரை அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை காஷி வித்வத் பரிஷத் எடுத்ததுள்ளது. இந்த விதி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும், மேலும் பேன்ட், சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்தவர்கள் தூரத்திலிருந்து தெய்வத்தை வணங்க முடியும். அவர்கள் கோவிலிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News