ஏப்ரல் 15 முதல் விமான சேவை துவக்கம்... முன்பதிவை துவங்கியது GoAir...

ஏப்ரல் 15, 2020 முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் எனவும், விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளைத் திறந்திருப்பதாகவும் வர்த்தக விமான நிறுவனமான GoAir தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 6, 2020, 04:54 PM IST
ஏப்ரல் 15 முதல் விமான சேவை துவக்கம்... முன்பதிவை துவங்கியது GoAir... title=

ஏப்ரல் 15, 2020 முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் எனவும், விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளைத் திறந்திருப்பதாகவும் வர்த்தக விமான நிறுவனமான GoAir தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஒரு அறிக்கையில், வாடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத no-frill கேரியர் விமான நிறுவனம், Go Air 2020 ஏப்ரல் 15 முதல் முன்பதிவுகளுக்கு திறந்திருக்கும் என்று கூறியுள்ளது. மற்றும் சர்வதேச விமானங்களுக்கான சேவை வரும் மே 1, 2020 முதல் துவங்கப்படும் எனவும், அதற்கான முன்பதிவு திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, COVID-19 தொற்றுநோய் பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக விமான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக 21 நாள் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பினை கருத்தில் கொண்டு, மார்ச் 27 அன்று, சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (DGCA) உள்நாட்டு விமானங்களை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்தது. 

முன்னதாக DGCA மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் பயணிகள் விமானங்களின் செயல்பாட்டை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் மற்றும் அதற்கு நேர்மாறாக அறிகுறி கொண்ட அனைத்து பயணிகளையும் மத்திய அரசு தற்காலிகமாக தடைசெய்ததையடுத்து, GoAir அதன் அனைத்து சர்வதேச நடவடிக்கைகளையும் 2020 ஏப்ரல் 15 வரை நிறுத்தியது. தற்போது முழுஅடைப்பு முடிவடைய இருக்கும் நிலையில் உள்நாட்டு விமான சேவைகளை துவங்க இருப்பதாக GoAir தற்போது தெரிவித்துள்ளது.

GoAir தவிர, ஏப்ரல் 15 முதல் இயக்கப்படும் விமானங்களுக்கான பயணிகள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம் என்று பட்ஜெட் பயணிகள் கேரியர் Air Asia India-வும் தெரிவித்துள்ளது.

Trending News