தொடர் மழை! அந்தேரி பகுதியின் பாலம் இடிந்து விபத்து!

மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் அந்தேரி பகுதியின் கோகலே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Last Updated : Jul 3, 2018, 09:01 AM IST
தொடர் மழை! அந்தேரி பகுதியின் பாலம் இடிந்து விபத்து! title=

மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் அந்தேரி பகுதியின் கோகலே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இடிந்து விழுந்து இந்த பாலமானது ஆந்தேரி மேற்கு மற்றும் ஆந்தேரி கிழக்கை இணைக்கிறது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக முதற்கட்ட தகவல் ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின் காரணத்தால் மேற்குப் பாதையில் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்ப்பட்டுயுள்ள இடத்திற்கு பிஎம்சி, தீயணைப்பு வாகனங்கள், ரயில்வே போலீஸ் படை விரைந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News