அஸ்ஸாம் - மேகாலயாவின் 50 ஆண்டு எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் வரலாற்று ஒப்பந்தம்!

கடந்த 50 ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் வடகிழக்கு மாநிலங்களின் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட செவ்வாய்க்கிழமை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 05:39 PM IST
  • டெல்லியில் இரு மாநிலங்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தம்
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சி
  • 'வடகிழக்கில் அமைதிக்கான பெருநாள்'
அஸ்ஸாம் - மேகாலயாவின் 50 ஆண்டு எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் வரலாற்று ஒப்பந்தம்! title=

வடக்கு கிழக்கில் அமைதியை நிலைநாட்ட செவ்வாய்க்கிழமை மற்றுமொரு முக்கிய முயற்சி எடுக்கப்பட்டது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

டெல்லியில் இரு மாநிலங்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எம்பி திலீப் சேகியா மற்றும் மேகாலயா முதல்வர் கொனார்ட் சங்மா ஆகியோர் டெல்லி வந்தனர். முதலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் படிக்க | உக்ரைன் போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றலாம்: ஐநா தலைமை செயலர்

உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சி 

எல்லை ஒப்பந்தத்திற்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு பெரிய முயற்சி என்று கூறினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனையில் 70 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எஞ்சிய பகுதிகளின் பிரச்னைகளும் இரு மாநில முதல்வர்களும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இரு மாநில முதல்வர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

'வடகிழக்கில் அமைதிக்கான பெருநாள்'

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். சர்ச்சையற்ற வடக்கு கிழக்கிற்கு இன்றைய தினம் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து வடகிழக்கினன் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். வடகிழக்கில் நிலவும் எல்லைப் பிரச்சனைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமரிடம் பேசினேன். அதன் பிறகு இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வர ஆரம்பித்தன என்றார்,

'அமைதியான சூழல் ஏற்படும்'

ஹிமந்தா பிஸ்வா சர்மா இது குறித்து மேலும் கூறுகையில், முதலில், 2019 இல், திரிபுராவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது. பின்னர் ஜனவரி 16 அன்று, புரு-ரியாங் பிரிவுகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது, இது 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க போடோ ஒப்பந்தம் 27 ஜனவரி 2020 அன்று கையெழுத்தானது. இதில்  50 ஆண்டுகால பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, செப்டம்பர் 2021 அன்று, கர்பி அங்லாங் ஒப்பந்தமும் இன்று அஸ்ஸாம்-மேகாலயா இடையே எல்லை ஒப்பந்தமும் கையெழுத்தானது என்றார்.

மேலும் படிக்க | Post Office வாடிக்கையாளர்களே அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News