குழந்தைகள் கண்முன் மனைவியை கொன்ற கணவன்

Last Updated : Aug 6, 2017, 05:10 PM IST
குழந்தைகள் கண்முன் மனைவியை கொன்ற கணவன் title=

மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தன் குழந்தைகள் கண்முன் மனைவியின் தலையை வெட்டி கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நலாசோபாரா (கிழக்கு), சந்தோஷ் புவனில் உள்ள ஷர்மமாடி யாதவ் சாவ்லில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜய் யாதவ் (35) என்பவர் அவரது மனைவி சரோஜாவின் (28) தலையை விடியற்காலை 1 மணியளவில் கூர்மையான கத்தியால் வெட்டி கொன்றுள்ளார். 

கொலை நடந்தபின், யாதவ் தனது மூன்று குழந்தைகளையும்,  ரம்ஜியவனவில் இருக்கும் தன் தந்தையிடம் அழைத்துச் சென்ற விட்டுள்ளார்.

தனது தந்தை சரோஜாவைப் பற்றி கேட்டபோது, யாதவ் அவர் வீட்டிலேயே தூங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  பின் யாதவ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவரது எட்டு வயதான மகள் அந்த கொலை சம்பவத்தைப் பற்றி தன் தாத்தாவிடம் கூறினார். அதை தொடர்ந்து, அவர் போலீசாரை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக போலிசார் ஐபிசி 302 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News