மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் ஜவான் ஒருவர் உயிரிழந்தார்

ஜார்கண்ட் துமாகா மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

Last Updated : Jun 2, 2019, 10:12 AM IST
மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் ஜவான் ஒருவர் உயிரிழந்தார் title=

ஜார்கண்ட் துமாகா மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பின்னிரவு அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர். 

இன்று அதிகாலை நடைபெற்ற தேடுதலின்போது சாஷாத்ரா சீமா பால் சிறப்புப்படையை சேர்ந்த ஒரு வீரர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தும்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஒய்.எஸ். ரமேஷ் தெரிவித்தார்.

 

Trending News