மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கணவர் தற்கொலை!

டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

Last Updated : Oct 9, 2017, 05:41 PM IST
மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கணவர் தற்கொலை! title=

புது டெல்லி: டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்டவர் ஜஸ்விந்தர் சிங் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு நடைப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் இவர் நேற்றிரவு, தனது பெற்றோரின் வீட்டில் இருந்த தனது மனைவியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வடநாட்டில் விமர்சையாக அனுசரிக்கப் படும் கர்வ சாஹூத் நோப்பினை அவரது மனைவி கடைப்பிடிக்கவில்லை என ஆத்திரம் கொண்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது அவரது மனைவியின் 13 வயதான சகோதரனும், சகோதரியும் சம்பவயிடத்தில் இருந்துள்ளனர். இந்த கத்திகுத்திற்கு பின்னர் அவர் மாடியை நோக்கி விரைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி தற்பொழுது BSA மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News