BSP தொண்டர்களிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள மாயாவதி அறிவுரை!!

எழுப்பிய சமாஜ்வாதி கட்சி தொண்டர்களிடம், தனது பகுஜன்சமாஜ் கட்சி தொண்டர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என மாயாவதி அறிவுரை!!

Last Updated : Apr 21, 2019, 12:24 PM IST
BSP தொண்டர்களிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள மாயாவதி அறிவுரை!! title=

எழுப்பிய சமாஜ்வாதி கட்சி தொண்டர்களிடம், தனது பகுஜன்சமாஜ் கட்சி தொண்டர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என மாயாவதி அறிவுரை!!

பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து கோஷம் எழுப்பிய சமாஜ்வாதி கட்சி தொண்டர்களிடம், தனது பகுஜன்சமாஜ் கட்சி தொண்டர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என மாயாவதி கூறினார்.

இந்தியா முழுவதுமான மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரட்சரங்கள் நாடுமுழுவதும் சூடுபிடித்து வருகின்றநிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 117 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. மக்களவை தேர்தலுக்காக உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைத்திருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிகளின் பிரச்சார கூட்டம் பிரோசோபாத் பகுதியில் நடைபெற்றது. 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மேடையில் பேசிக்கொண்டு இருந்த போது, சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் சற்று பொறுமை இழந்த மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

Trending News