நமாமி கங்கே திட்டத்தில் கங்கை நீரின் தரம் மேம்பட்டுள்ளது: அரசு

நமாமி கங்கே திட்டத்தின் (என்ஜிபி) கீழ் 2019 ஆம் ஆண்டில் கங்கை நதி நீரின் தரத்தை மேம்படுத்தியுள்ளன என்று மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. 

Last Updated : Feb 11, 2020, 09:53 AM IST
நமாமி கங்கே திட்டத்தில் கங்கை நீரின் தரம் மேம்பட்டுள்ளது: அரசு title=

நமாமி கங்கே திட்டத்தின் (என்ஜிபி) கீழ் 2019 ஆம் ஆண்டில் கங்கை நதி நீரின் தரத்தை மேம்படுத்தியுள்ளன என்று மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. 

27 இடங்களில் கரைந்த ஆக்ஸிஜன் அளவுகள் மேம்பட்டுள்ளன, உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) அளவுகள் மற்றும் மல கோலிஃபார்ம்கள் முறையே 42 மற்றும் 21 இடங்களில் மேம்பட்டுள்ளன.

மத்திய ஜல்சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நமாமி கங்கே திட்டத்தின் (என்ஜிபி) கீழ் கங்கை நதி நீரின் தரம் பலனளிக்கத் தொடங்கியுள்ளன, மேலும் அனைத்து திட்டங்களும் செயல்பட்டவுடன் கங்கை நதியின் நீரின் தரம் மேலும் மேம்படும்.

இந்நிலையில் நமாமி கங்கே திட்டம் (என்ஜிபி) 2014 உடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் கங்கை நதி நீர் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending News