மனித மண்டை ஓடுகளை கடத்த முயன்ற வடநாட்டு வாலிபர் கைது!

பிஹார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!

Last Updated : Nov 28, 2018, 10:36 AM IST
மனித மண்டை ஓடுகளை கடத்த முயன்ற வடநாட்டு வாலிபர் கைது! title=

பிஹார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!

பிஹார் மாநிலம் கிழக்கு சப்பாரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது ஏராளமான மனித மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் கூடிய ஒரு சாக்கு மூட்டை காவல்துறையினர் பார்வையில் சிக்கியுள்ளது.

இதையடுத்து, பிடிப்பட்ட சாக்குமூட்டையினை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத்(வயது 29) என்பவரைக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே காவல்துறை டிஎஸ்பி தன்வீர் அகமது தெரிவிக்கையில்... நேற்று வழக்கம்போல் சப்பாரா ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். ரோந்து பணியின் போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு சாக்கு மூட்டை சிக்கியது.

இந்த மூட்டையில் 16 மனித மண்டை ஓடுகளும், 34 மனித எலும்பு கூடுகளும் கிடைத்தன. மேலும் பூடான் நாட்டு பணநோட்டுகளும், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் அட்டைகள், சிம்கார்டுகள் கிடைத்தன. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சஞ்சய் பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிடிப்பட்ட சஞ்சய் பிரசாத் இடம் விசாரணை நடத்தியதில், அவர் கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூடானுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை சப்ளை செய்யும் பணியை பிரசாத் செய்துவந்துள்ளார் எனவும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். காவல்துறை விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், என தெரிவித்தார்.

Trending News