தனக்கு நடந்த வன்கொடுமை கதையை பகிர்ந்த நடிகை உஷோஷி சென்குப்தா..

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

Last Updated : Jun 19, 2019, 01:53 PM IST
தனக்கு நடந்த வன்கொடுமை கதையை பகிர்ந்த நடிகை உஷோஷி சென்குப்தா.. title=

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

உலகை சுற்றி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. என்னதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் எங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை மிருத்தமுடியவில்லை. குழந்தையில் இருந்து மூதாட்டியையும் விட்டுவைக்காமல் தங்களின் காம இச்சைக்கு இறையக்கி விடுகின்றனர் சில காம கோடூரர்கள். 

இந்நிலையில், பிரபல மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தனக்கு நடந்த வன்முறை சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உஷோஷி சென்குப்தா 2010 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸாக இருந்தார். இதுகுறித்து அவ பத்விட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது; பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் உஷோஷி பதிவிட்டுள்ளார். அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

அருகில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் உதவிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள உஷோஷி, வெகு தாமதமாக போலீசார் வந்த போது அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Trending News