NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க உச்ச கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: மம்தா

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!

Last Updated : Aug 27, 2020, 06:03 AM IST
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க உச்ச கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: மம்தா title=

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட மாநிலங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநில முதலவர்களுடனும், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுடனும் சோனியா காந்தி காணொலி வாயிலாக நேற்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ALSO READ | ஓட்டுநர் உரிமம், RC, Permit –ன் validity மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது: புதிய தேதி என்ன?

இந்தக் கூட்டத்தில் NEET, JEE தேர்வு பற்றி மம்தா பானர்ஜி கூறியதாவது... "NEET, JEE தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறுகிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஏன்? பிரதமருக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. நமது கருத்தை பிரதமர் கேட்கவில்லையெனில், நாம் அனைவரும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்.நாம் அனைவரும் சேர்ந்து இதைச் செய்வோம் என மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறோம். தற்காலிகமாகத் தேர்வுகளை ஒத்திவைத்து உகந்த சூழலில் நடத்துவதற்குக் கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளோம். அவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், அதைச் செய்து தர தயாராக உள்ளோம். 

இதையடுத்து சோனியா காந்தி கூறுகையில்..... சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சட்டத்தை "ஜனநாயக விரோதம்" என்று காந்தி குறிப்பிட்டார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான சட்டங்கள் மோடி அரசாங்கத்தால் பலவீனப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். தேசிய கல்வி கொள்கை போன்ற அறிவிப்புகள் எதிர்க்கட்சியை மதச்சார்பற்ற மற்றும் விஞ்ஞான விழுமியங்களுக்கு ஒரு பின்னடைவு என்பதால் அரசாங்கத்தின் "உணர்வின்மையை" வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், NEET, JEE தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். இதன்மூலம், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 7 மாநில அரசுகளும் NEET, JEE தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவித்ததன்படி JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், NEET தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News