தீபிகாவை எரித்தால் ரூ.1 கோடி: புவனேஸ்வர் சிங்.

பத்மாவதி திரைபடத்தின் கதாநாயகி தீபிக படுகோனை உயிரோடு எரித்தால் ரூ.1 கோடி வழங்குவதாக புவனேஸ்வர் சிங் அறிவித்துள்ளார்.

Last Updated : Nov 20, 2017, 11:53 AM IST
தீபிகாவை எரித்தால் ரூ.1 கோடி: புவனேஸ்வர் சிங். title=

சஞ்சய் லீலா பன்சலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பத்மாவதி'. 

இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அகில இந்திய ஷத்ரிய மகாசபா என்ற அமைப்பின் இளைஞர் அணித் தலைவர் புவனேஸ்வர் சிங் பத்மாவதி திரைபடத்தில் நடித்துள்ள தீபிக படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து, உத்தரபிரதேச துணை முதலமைசர் கேசவ் பிரசாத் மவுரிய பத்மாவதி திரைபடத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இம்மாநிலத்தில் இந்த திரை படத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தனர். 

Trending News