மும்பை-கராச்சி விமான சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்

Last Updated : May 8, 2017, 10:49 AM IST
மும்பை-கராச்சி விமான சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் title=

மும்பை - கராச்சி இடையேயான விமான போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் மும்பைக்கும் இடையேயான விமான சேவையை மேற்கொண்டு வந்தது. இச்சேவை இன்று முதல் நிறுத்தப்படுகிறது என பாகிஸ்தான் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் வியாழக்கிழமை அன்று கராச்சி- மும்பை இடையே விமான சேவை நடைபெறவில்லை. பாகிஸ்தான் இந்தியா இடையே அரசியல் உறவு சரியில்லாதது தற்போதைய நிலை என்றாலும் இச்சேவை நிறுத்தத்துக்கான காரணத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தெரிவிக்கவில்லை. ஆனால், சில வணிக ரீதியான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு இருக்கலாம் என பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Trending News