ராமர் நல்லாட்சியின் அடையாளம். ராமராஜ்ஜியத்தில் மக்களே ராஜாக்கள் -பிரதமர் மோடி

Narendra Modi in Andhra Pradesh: தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம். ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 16, 2024, 06:25 PM IST
  • சமூக வாழ்வில் நல்லாட்சியின் அடையாளம் ராமர். மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம்.
  • ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறேன் -மோடி
  • பொதுமக்களிடம் இருந்து எதை எடுத்தோமோ, அதை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தோம்
ராமர் நல்லாட்சியின் அடையாளம். ராமராஜ்ஜியத்தில் மக்களே ராஜாக்கள் -பிரதமர் மோடி title=

Ram Mandir Inauguration: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜனவரி 16, செவ்வாய்க்கிழமை) பேசுகையில், தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக உள்ளது. மகாத்மா காந்தியும் ராமராஜ்ஜியம் பற்றி அதிகமாக பேசுவார். ராமர் சமூக வாழ்வில் நல்லாட்சியின் அடையாளமாக இருக்கிறார். மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம் எனக் கூறினார்

சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் நேஷனல் அகாடமி ஆஃப் (NACIN) ஐத் திறந்து வைத்த பிறகு பேசும் போது, புதிய வளாகத்திற்காக தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமிக்கு (NACIN) பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த அற்புதமான புதிய வளாகத்தில் NACIN இல் உள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த வளாகம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் கட்டப்பட்டு இருப்பது ஒரு சிறப்பு. தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக உள்ளது. ராமர் சமூக வாழ்வில் ஆட்சி மற்றும் நல்லாட்சியின் அடையாளம். இது உங்களுக்கும் சிறந்த உத்வேகமாக அமையலாம் என்றார். 

"நேரத்தை வீணாக்காமல், பணிகளை சரியாக முடிப்பதால், தவறுகள் குறைவாக இருக்கிறது" என்று நம்பிக்கை இருக்கிறது என்று பாரதத்திடம் ராமர் கூறுவார், அதுபோல கடந்த பல ஆண்டுகளாக, எங்கள் அரசு செலவில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

மேலும் படிக்க - "மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்

11 நாட்கள் உண்ணாவிரதம் -பிரதமர் மோடி

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என்று கூறினார். இப்போதெல்லாம் நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. ராமரின் வாழ்க்கையின் நோக்கம், அவரது உத்வேகம் மற்றும் நம்பிக்கை பக்தியின் எல்லைக்கு அப்பாற்பட்டது. ராமர் சமூக வாழ்வில் நல்லாட்சியின் அடையாளமாக இருக்கிறார். அவர் உங்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாக இருக்க முடியும் என்றார். 

ராமராஜ்யம் பற்றி பிரதமர் மோடி என்ன சொன்னார்? 

ராமராஜ்ஜிய நல்லாட்சி 4 தூண்களில் நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இந்த நான்கு தூண்கள் என்பது, "அனைவரும் தலை நிமிர்ந்து, மரியாதையுடன் அச்சமின்றி நடக்கக்கூடிய இடத்தில், ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் இடத்தில், பலவீனமானவர்கள் பாதுகாக்கப்படும் இடத்தில், மதம் அதாவது கடமையே முதன்மையான இடத்தில், பொதுமக்களே ராஜா,  அரசு மக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் ராமராஜ்ஜியம் உள்ளது என்றார்.  

மேலும் படிக்க - அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... 55 நாடுகளுக்கு அழைப்பு!

ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி என்ன சொன்னார்?

நாட்டிற்கு ஜிஎஸ்டி அளித்ததன் மூலம் புதிய நவீனத்தை வழங்கினோம். 7 லட்சம் வரை வரிவிலக்கு அளித்தோம். இதன் மூலம் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி வரி சேமிக்கப்பட்டு உள்ளது. இன்று, நாட்டின் வரி செலுத்துபவர் தனது வரி சரியாகப் பயன் படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, ​​​​பலரும் முன் வந்து வரி செலுத்துகிறார்கள். பொதுமக்களிடம் இருந்து எதை எடுத்தோமோ, அதை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தோம். இதுதான் நல்லாட்சி என்றார். 

இரண்டு நாள் ஆன்மீகப் பயணம் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 16) முதல் கேரளா மற்றும் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இது பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணமாகும்.

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு உள்ளார். நாளை (ஜனவரி, 17, புதன்கிழமை) கேரளா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பெரிய கோயில்களில் வழிபாடு செய்கிறார். அதாவது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்குச் செல்கிறார்.

மேலும் படிக்க - Consecration ceremony: அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கில் சனாதன விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News