542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது...

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது!

Last Updated : May 19, 2019, 07:38 PM IST
542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது... title=

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது!

நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைப்பெற்றது. 7-ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில் நாட்டின் 542/543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றோடு முடிவடைந்தது.

இன்றைய தேர்தலை பொருத்தவரையில் அதிகபட்சமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் 73.05% வாக்கு பதிவானது. இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் 70.05%, மத்திய பிரதேசம் 69.83%, இமாச்சல் பிரதேஷ் 66.18%, சண்டிகர் 63.57%, பஞ்சாப் 58.81%, உத்திர பிரதேசம் 54.37% வாக்குகள் பதிவாகின. குறைந்த பட்சமாக பீகாரில் 49.92% வாக்குகள் பதிவாகின. ஆக ஒட்டுமொத்தமாக 60.21% வாக்குகள் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பதிவாகியுள்ளன.

தேர்தலுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி தேர்தலுக்கு முன்னதாக ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல்.,

  • ஆவணமின்றி பிடிக்கப்பட்ட பணம் 839.03 கோடி
  • 294.41 கோடி மதிப்பிலான மதுபானங்கள் 
  • 1,270.37 கோடி மதிப்பிலான போதை வஸ்த்துக்கள்.
  • இதர பொருட்கள் - 58.56 கோடி

Trending News