நாட்டின் அரசியலமைப்பின் மீது பாஜக தாக்குதல் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் அரசியலமைப்பின் மீது பாரதீய ஜனதா கட்சி தாக்குதல் நடத்துவதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.  

Last Updated : Dec 28, 2017, 07:12 PM IST
நாட்டின் அரசியலமைப்பின் மீது பாஜக தாக்குதல் என  ராகுல் காந்தி குற்றச்சாட்டு title=

நாட்டின் அரசியலமைப்பின் மீது பாரதீய ஜனதா கட்சி தாக்குதல் நடத்துவதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட அவர் பேசும்பொழுது, பாரதீய ஜனதா கட்சியால் அரசியலமைப்பு தாக்கப்பட்டு வருகிறது. 

அரசியலமைப்பினை பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு தனி நபரின் வருங்காலதினை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.

காங்கிரசின் பெருமைக்குரிய வரலாறை பற்றி பேசிய ராகுல், கட்சியின் மைய கருத்து என்பது உண்மையாக உள்ளது. அதற்காக நாம் தொடர்ந்து போரிடுவோம் என கூறியுள்ளார். நாம் துன்புறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ, நாம் உண்மையை விட்டு விட கூடாது என்று கூறினார்.

Trending News