தேசத்திற்காக உழைத்தவர் வாஜ்பாயி; ராகுல் காந்தி புகழாரம்!

பாரத தேசத்திற்காக அயராது உழைத்தவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 12, 2018, 06:40 PM IST
தேசத்திற்காக உழைத்தவர் வாஜ்பாயி; ராகுல் காந்தி புகழாரம்! title=

பாரத தேசத்திற்காக அயராது உழைத்தவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி, உடல்நல குறைவு காரணமாக நேற்றைய தினம் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் தற்போது சீறாக இருக்கின்றது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயி அவர்களை கண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லி AIIMS மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள அவர்... "அட்டல் பிஹாரி வாஜ்பாயி, தேசத்திற்காக உழைத்தவர். நாட்டிற்காக உழைத்தவரை சந்தித்து மரியாதை செலுத்துவதில் தவறில்லை. வாஜ்பாயினை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்ட போதிலும், காங்கிரஸ் கட்சியின் சிப்பாயாக சென்று அவரை சந்திப்பத்தில் பெருமை படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலம் அவர் பேசுகையில், பிரதமர் மோடி தனது அரசியல் குருவான LK அத்வானியை அவமதித்து இருக்கலாம், ஆனால் தான் ஒருபோதும் தனது குருவினை மதிக்காமல் செயல்பட்டத்திலை. வாஜ்பாயி அவர்களும் எனது அரசியல் குரு தான் என தெரிவித்துள்ளார்.

Trending News