ராஜஸ்தானில் 6-வயது குழந்தையை கற்பழித்து! கொலை செய்த ஆசாமி!

இச்சம்பவம் ராஜஸ்தானில் ஜலவால் பகுதியில், நேற்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 6-வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 

Last Updated : Feb 16, 2018, 10:02 AM IST
ராஜஸ்தானில் 6-வயது குழந்தையை கற்பழித்து! கொலை செய்த ஆசாமி! title=

இச்சம்பவம் ராஜஸ்தானில் ஜலவால் பகுதியில், நேற்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 6-வயது குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தன்று, தங்கள் வீட்டினுள் இருந்த அச்சிறுயை நேற்று மர்ம நபர் ஒருவர் தனியாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார், பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை அலறியுள்ளார்.

இச்சம்பவத்தால் வேதனைக்குள்ளான அக்குழந்தையை கண்ட பெற்றோர்கள் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

பின்னர் இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News