நேரத்திற்கு அலுவலகதில் இருக்க வேண்டும்; புதிய அமைச்சர்களுக்கு உத்தரவு!

மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : Jun 13, 2019, 09:43 AM IST
நேரத்திற்கு அலுவலகதில் இருக்க வேண்டும்; புதிய அமைச்சர்களுக்கு உத்தரவு! title=

மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது!!

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மந்திரிசபைக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் சிலவற்றை நேரில் சென்று அலுவலகத்தில் இருந்து மற்றவர்களுக்காக ஒரு உதாரணத்தை அமைந்துள்ளார். மோடி தலைமையிலான மசோதா கடந்த மாதத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மந்திரிகள் சபையின் முதல் கூட்டத்தில், பிரதம மந்திரி மூத்த அமைச்சர்களை புதிய பொறுப்பாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநில அமைச்சர்கள் இன்னும் அதிக பங்கைக் கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது, உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

மேலும், பணியில் பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும்படியும் வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் கலாசாரத்திற்கு முடிவுகட்டுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமலில் இருக்கும் 40 நாட்களில் அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் பணிகளில் வளர்ச்சிகள் குறித்து அதிகாரிகளுடனும் எம்பிக்களுடனும் ஆலோசனை நடத்துமாறும் மூத்த அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அமைச்சகங்களும் 5 ஆண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதன் அடிப்படையில் முதல் நூறு நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

Trending News