போதையில் மிதக்கும் கல்லூரி இளசுகள்; வெளியான அதிர்ச்சி வீடியோ

கர்நாடக மாநிலம் சிவமொகாவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி வளாகம் முன் போதையில் மாணவர்கள் தள்ளாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2022, 02:32 PM IST
  • கல்லூரி மாணவர்கள் ரகளை
  • போதையில் கல்லூரி இளசுகள்
  • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
போதையில் மிதக்கும் கல்லூரி இளசுகள்; வெளியான அதிர்ச்சி வீடியோ title=

சிவமொக்காவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் செய்த சேட்டை ராகளைகளை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர்.

சிவமொக்கா சாகர் சாலையில் பெசிட் கல்லூரி இருக்கிறது. இந்த சாலையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் கல்லூரி முன்பு அட்டகாசங்களை செய்துள்ளனர். இவர்களின் இந்த அட்டகாசங்களை அந்தப் பகுதியில் சென்ற சிலர் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பியதால் வீடியோ வைரலாகி வந்ததுடன் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

பெசிட் கல்லூரியில் கடந்த சில நாட்களாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருவதாக கூறப்பட்டு வந்தது. மேலும் கஞ்சாவுக்கு அடிமையான மாணவர்கள் கல்லூரியில் ரகளை செய்து வந்தனர். 

இந்த நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையாகிய சில மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. அந்த வகையில் தற்போது இன்று சில மாணவர்கள் கல்லூரி முன்பு கஞ்சா போதையில்  தள்ளாடும் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பகலில் கஞ்சா குடித்து குங்கா போதையில்  மாணவர்கள் செய்த அட்டகாசங்களை அந்த பகுதியில் சென்றவர்கள் தொலைபேசியில் படம் பிடித்தனர். மேலும் இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் போதையில் மிதக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கஞ்சா போதையில் கல்லூரி முன்பு ரகளை செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News