உபி -யில் தொடரும் வன்கொடுமைகள்!

Last Updated : Aug 26, 2017, 03:45 PM IST
உபி -யில் தொடரும் வன்கொடுமைகள்! title=

உபி கொண்டாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் மாவட்ட மருத்துவமனையின் தனிமைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். புஷ்கர் குமார் என்னும் அம்மருத்துவமனை ஊழியர் இரவில் பலவந்தமாக இப்பெண்மணியை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என காவல்துறை அதிகரி உமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காலை பணிக்கு வந்த செவிலியரிடம் இவர் தெரித்த பின்னர் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பெண் அனுப்பப்பட்டுள்ளர்.

இது தொடர்பாக உபி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.

Trending News