ஞானவாபி - சிருங்கர கவுரி வழக்கு... வாரணாசி நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர்.

Last Updated : May 23, 2023, 01:20 PM IST
  • ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் வாரணாசி நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை முக்கிய தீர்ப்பு.
  • ஏழு வழக்குகளின் விசாரணையையும் ஒன்றாக நடத்த உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு.
ஞானவாபி - சிருங்கர கவுரி வழக்கு... வாரணாசி நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! title=

வாரணாசி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் வாரணாசி நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை முக்கிய தீர்ப்பு வழங்கியது. தகராறு தொடர்பான ஏழு மனுக்களை ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர். ஞானவாபி சிருங்கர கௌரி வழக்கில் நான்கு பெண் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இது தகராறு தொடர்பாக ஏழு வழக்குகள் உள்ளன, அவை ஒரே மாதிரியானவை ஆனால் வெவ்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்ப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஏழு வழக்குகளின் விசாரணையையும் ஒன்றாக நடத்த உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது.

நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி மனு

ஞானவாபி சிருங்கர் கவுரி தகராறு வழக்கில் நான்கு பெண் வழக்குரைஞர்களின் மேல்முறையீட்டில், ஞானவாபி தொடர்பான ஏழு வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் இருப்பதாகவும்,  அந்த மனுக்களிலும் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த மனு சிருங்கர் கௌரியின் தரிசனம் மற்றும் வழிபாடு தொடர்பானது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களுக்கு முன் முடிவடைந்தது. தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை அன்று நீதிமன்றமும் இதற்கான தீர்ப்பை வழங்கியது.

ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி

இந்த விவகாரத்தில் மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு அஜய் குமார் விஸ்வேஷ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இப்போது ஒரே மாதிரியான ஞானவாபியின் ஏழு வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர்.

காசி விஸ்வநாதர் ஆலயம் - ஞானவபி மசூதி

முன்னதாக, காசி விஸ்வநாதர் ஆலயம் ஞானவபி மசூதி தொடர்பான வழக்கில், மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படும்  இந்நிலையில், சில ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலாகாபாத் உயா் நீதிமன்றம், சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சோ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூா்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்திவைத்தது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பப்ஜியில் மலர்ந்த காதல்: போக்சோவில் கைதான இளைஞர் - பெற்றோருடன் சென்ற 17 வயது சிறுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News