Veena Kapoor Murder : இறந்த பின் உயிரோடு வந்த நடிகை... மகன் கொலை செய்யவில்லையா?

TV Actress Veena Kapoor Murder News: தான் உயிரோடுதான் இருப்பதாகவும், தன்னை தனது மகன் கொலை செய்யவில்லை என்றும் இணையத்தில் பரவிவரும் செய்திக்கு வீணா கபூர் பதிலளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2022, 04:26 PM IST
  • வீணா கபூர் கொலை குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
  • ரசிகர்கள், பாலிவுட் வட்டாரம் பெரும் சோகத்தில் ஆழ்ந்தன.
Veena Kapoor Murder : இறந்த பின் உயிரோடு வந்த நடிகை... மகன் கொலை செய்யவில்லையா? title=

TV Actress Veena Kapoor Murder News: கடந்த சில நாள்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகையான வீணா கபூர், சொத்து தகராறால் அவரது மகனால் அடித்துக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 74 வயது வீணா கபூரை அவரது மகன் சச்சின், பேஸ்பால் மட்டையால் தலையில் பலமுறை அடித்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, வீணாவின் உடலை ஆற்றில் அவர் வீசி சென்றதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து, வீணா கபூரின் சச்சின், அவர் வீட்டின் பணியாளர் சோட்டு ஆகியோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. உள்ளூர் ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் இதை செய்திகளாக வெளியிட்டிருந்தன. இந்த செய்திகளால், பாலிவுட் வட்டாரங்களும், ரசிகர்களும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

மேலும் படிக்க | கர்ப்பத்தை மறைத்த விஜய் பட நடிகை! ஏன் தெரியுமா?

ஆனால், தற்போது அதைவிட அதிர்ச்சிக்கரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை வீணா கபூர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் அவர் போலீஸில் தற்போது புகார் ஒன்றையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வீணா கபூர் என்ற பெயரில் மற்றொரு பழம்பெரும் பாலிவுட் நடிகையும் உள்ளார். ரசிகர்கள் பலரும், உயிரிழந்த வீணா கபூரை குழப்பி, உயிருடன் இருப்பவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, சில ஊடகங்களும் தவறாக அவரின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதையடுத்து, வீணா கபூர் தன்னை யாரும் கொல்லவில்லை என்றும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் உயிரிழந்தவிட்டதாக அவருக்கு தொடர்ந்து செல்போன் அழைப்புகளும், மெசேஜ்களும் வந்துள்ளதை அடுத்து, அவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். 

தன்னை தனது மகன் அடித்து கொன்றதாக தகவல் பரவியதை தொடர்ந்து, நேற்று மும்பை திண்டோஷி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பலரும் இணையத்தில், தனது மகனை கொலையாளி என குற்றஞ்சாட்டி வருவதை கண்டித்தும், தனக்கு இரங்கல் தெரிவிப்பதை எதிர்த்தும் பேசியுள்ளார். 

இதுகுறித்து வீணை கபூர் கூறியதாவது,"இதுதொடர்பாக பல செல்போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருகின்றன. இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன், என் மகன் என்னைக் கொல்லவில்லை. இந்த செய்திகளால், எனக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள்".

இதுகுறித்து வீணா கபூரின் மகன் அபிஷேக் சத்தா கூறுகையில், "என் அம்மாவை நான் கொன்றேன் என்று பல அழைப்புகள் எனக்கும் வந்தன. நான் கனவில் கூட அப்படி நினைக்கமாட்டேன். என் அம்மாவை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த செய்தி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை படித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், என் அம்மா உயிருடன் இருக்கிறார், நான் அவரை கொல்லவில்லை" என்றார்.

மேலும் படிக்க | இயக்குநரை உருவ கேலி செய்த விவகாரம் - வலுத்த எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த மம்மூட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News