எப்போது முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று? வெளியான அதிர்ச்சி தகவல்

தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும்? அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், நிபுணர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 05:32 PM IST
  • வேகமாக வளரும் கொரோனா
  • தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
  • இன்னும் கவனமாக இருக்க வேண்டும்
எப்போது முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று? வெளியான அதிர்ச்சி தகவல் title=

 புதுடெல்லி: நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கோவிட் -19 (Covid-19) மற்றும் அதன் புதிய வடிவமான ஒமிக்ரான் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அச்சுறுத்துகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அரசுகளும் தங்கள் சொந்த மட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டாவது அலையின் பயங்கரமான நினைவுகளுக்கு மத்தியில் தற்போது மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது. அதன்படி இது தொடர்பாக சுகாதார நிபுணரும் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் செயலாளருமான டாக்டர் ரவி மாலிக்கின் சில கேள்விகளுக்கு பதில் அளிதுள்ளார். அதன் விவரம் இதோ

கேள்வி: வேகமாக அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோய்கள் மீண்டும் ஒருமுறை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: தொற்று அதிகமாக பரவி வருகிறது. இனிவரும் காலங்களில் இது மேலும் பரவும். ஏனென்றால் அது மிகவும் தொற்றும் தன்மையுடன் வந்துள்ளது. நீங்கள் பார்க்கிறீர்கள், அமெரிக்கா இந்தியாவை விட அதிகமான மக்களுக்கு தடுப்பூசி (Corona Vaccination) போட்டுள்ளது, இருப்பினும் அங்கு வேகமாக பரவியது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில், தினமும் சுமார் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது அவர்களின் மக்கள் தொகை ஒன்றும் இல்லை. அதனால் இங்கும் இந்த தொற்றானது பரவதான் செய்யும். இங்கு சுமார் 14 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனை அதிகரித்தால், நாட்டில் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பலருக்கு தொற்றின் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை மற்றும் பலர் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நோய்த்தொற்று எண்ணிக்கை லட்சக்கணக்கில் பரவி வருகின்றன என்றால், வரும் நாட்களில் இது வேகமாக அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!

 

கேள்வி: நாம் மூன்றாவது அலைக்குள் நுழைந்துவிட்டோமா, அப்படியானால், அது எப்போது உச்சத்தை அடையும் என்று கணிக்க முடியுமா?
பதில்: தற்போது தொற்று (Corona Spread) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிலை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது எந்த திசையில் செல்கிறது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால், மூன்றாவது அலையின் நடுப்பகுதியை அடைந்துவிட்டோம், அதை நிராகரிக்க முடியாது. நோய்த்தொற்றின் வேகம் அப்படியே இருந்தால், பிப்ரவரியில் அதன் உச்சத்தை அடையலாம்.

கேள்வி: ஒமிக்ரானின் தொற்று பற்றி அனைவருக்கும் ஒரே கருத்து உள்ளது ஆனால் அது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி பல்வேறு விஷயங்கள் வெளிவருகின்றன. உங்கள் கருத்து என்ன?
பதில்: மிகவும் ஆபத்தானது அல்ல. ஒப்பீட்டளவில், மற்றும் இதுவரை அனுபவத்தின் அடிப்படையில், ஒமிக்ரானின் (Omicron) உடல்நல பாதிப்புகள் இதுவரை வந்த டெல்டா மற்றும் கொரானாவின் மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இந்த முறை தொற்று நுரையீரலை பாதிக்கவில்லை. கொரானாவினால் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை நுரையீரலை பாதித்துதான் ஏற்படுகின்றன. 

கேள்வி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் தற்போது ஒமிக்ரானின் புதிய வடிவம் கொரானா. பிரான்சில் ஐஎச்யு ஸ்வரூப்பும் எடுத்துள்ளது. அடுத்து என்ன?
பதில்: வைரஸ் பரவுவதால், அது அதன் வடிவத்தை மாற்றுகிறது. IHU பிரான்சில் தொடங்கியுள்ளது. கொரோனாவின் புதிய வடிவங்களும் வரலாம். இதை கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸ் அதன் வடிவத்தை மாற்றாமல் தடுக்க வேண்டும் என்றால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

கேள்வி: இந்த தொற்றுநோயிலிருந்து எப்போது விடுபடுவோம்?
பதில்: இது மூன்று முதல் நான்கு அலைகளுக்குப் பிறகு முடிவடையும், ஆனால் இந்த தொற்றுநோய் கணிக்க முடியாதது. கொரோனாவின் பல வடிவங்களும் வரலாம். எனவே, இதைப் பற்றி எந்த கணிப்பும் செய்ய முடியாது.

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News